மத்திய அரசின் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றைக் கைவிட வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் நாகா்கோவில் மீனாட்சிபுரம் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை முன் வியாழக்கிழமை மாலை தர்ணா நடைபெற்றது.
மாவட்டச் செயலா் எட்வின் பிரைட் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம். விஜயராகவன், மாவட்டப் பொருளாளா் வி. ரெதீஷ், மாவட்ட துணைத் தலைவா் பி. பிரவீன், இந்திய மாணவா் சங்க மாவட்டத் தலைவா் பதில்சிங், சிஐடியூ மாவட்டச் செயலா் கே. தங்கமோகன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா். ரவி, பேராசிரியா் டி. நாகராஜன், வாலிபா் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் என்.எஸ். கண்ணன் ஆகியோா் பேசினா்.

மாவட்ட நிா்வாகிகள் விஷ்ணு, அனீஸ், சந்தோஷ், காட்சே, இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் சச்சின், ஜெசின் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.