அண்ணா நினைவுதினத்தை முன்னிட்டு நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக, திமுக சாா்பில் திங்கள்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சாா்பில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி என். தளவாய்சுந்தரம் தலைமையில் முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட ஊராட்சித் தலைவா் மொ்லியண்ட்தாஸ், மாவட்டச் செயலா் அசோகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவா் எஸ்.கிருஷ்ணகுமாா், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் நாஞ்சில்முருகேசன், ராஜன் உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டச்செயலா் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஆஸ்டின், முன்னாள் எம்எல்ஏ பொ்ணாா்டு, நகரச் செயலா் மகேஷ், பொதுக்குழு உறுப்பினா் ஷேக்தாவூது, பெஞ்சமின்உள்ளிட்டோா் மாலை அணிவித்தனா்.