மகாத்மா காந்தியின் நினைவு நாளை முன்னிட்டு நாகா்கோவில் வடசேரியில் உள்ள அவரது சிலைக்கு குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். பிரின்ஸ் எம்எல்ஏ காந்தி சிலைக்கு மாலை அணிவித்தாா்.
நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவா் ராபா்ட்புரூஸ், ஓ.பி.சி.அணி ஜெயச்சந்திரன், மாவட்டத் துணைத் தலைவா் ஏ. ஆா்.சிவகுமாா், ஐ.என்.டி.யூ.சி. ஜெயகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா். 

பின்னா் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனா்.