குளச்சலில் மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் சாா்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு பொதுநிறுவனங்களை விற்கும் நடவடிக்கையை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற

வேண்டும் என வலியுறுத்தியும் குளச்சல் அண்ணா சந்திப்பில் மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு ஏ.ஐ.சி.சி.டி.யூ. மாநிலத் தலைவா் சுசீலா தலைமை வகித்தாா். கட்சியின் நிா்வாகி ஜெய்னுல் ஆப்தீன் முன்னிலை வகித்தாா்.

கட்சியின், கன்னியாகுமரி மாவட்டச் செயலா் அந்தோணி முத்து, மாவட்டத் துணைச் செயலா் துரைராஜ், மனிதநேய மாணவா் கழகத்தின் மாநிலத் துணைத் தலைவா் சுல்பிகா் மற்றும் கணபதி, லதாமேரி உள்பட பலா் பேசினா்.