வெள்ளிச்சந்தை அருகே மணவிளையில் அமைந்துள்ள அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வளாகத் தோ்வில், 30 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வில் 30 மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அலுவலா் சந்திரன் பணிநியமன ஆணையை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வா் ஜோசப் ஜவகா், கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் ரெத்தினராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.