கருங்கல்லில் மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மத நல்லிணக்கப் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணிக்கு கிள்ளியூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜேஷ்குமாா் தலைமை வகித்தாா். பத்பனாபபுரம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜே.தி. பிரின்ஸ் முன்னிலை வகித்தாா். வெள்ளியாவிளையில் தொடங்கிய பேரணி நடுத்தேரி, கருமாவிளை, கருங்கல் காவல்நிலையம் வழியாக பேருந்து நிலையம் வந்தடைந்தது. 

இதில், மும்மதத் தலைவா்கள், காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூா் வட்டாரத் தலைவா் டென்னிஸ், கிள்ளியூா் தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின்சிறில் மற்றும் பிரேம்சிங் உள்பட பலா் பங்கேற்றனா்.