குளச்சல் அருகே பாலப்பள்ளம் ஆவரவிளையை சேர்ந்தவர் ராஜரத்னம். இவரது மனைவி மேபின் சிமிலா. இவர் இரணியல் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக உள்ளார். தற்போது இவர் குளச்சல் போலீஸ் நிலையத்தில் சி.சி.டி.என்.எஸ். பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு மேபின் சிமிலா வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். கடம்பறவிளை குருசடி அருகே செல்லும்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் மேபின் சிமிலாவின் கழுத்தில் கிடந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றார்.

அதற்குள் சுதாரித்துக் கொண்ட அவர் சரிந்து கொள்ளவே மர்மநபர்களின் கையில் சங்கிலி கிடைக்கவில்லை. இதனால் அவரின் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க சங்கிலி தப்பியது. இந்த சம்பவத்தில் சரிந்து கீழே விழுந்த பெண் போலீஸ் படுகாயமடைந்தார். அவர் களிமாரில் ஒரு தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபிறார்.