தக்கலை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்க்கிழமை (பிப்.11) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக தக்கலை செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:- தக்கலை கோட்டம், செம்பொன்விளை மற்றும் சேரமங்கலம் உப மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

செம்பொன்விளை, திக்கணங்கோடு, தெங்கன்குழி, மத்திகோடு, சாஸ்தான்கரை, சேனம்விளை, கொட்டில்பாடு, சைமன்காலனி, கீழ்க்கரை, குளச்சல், மிடலாக்காடு, பிடாகை, கோடிமுனை, ஆலஞ்சி, வாணியக்குடி, பத்தறை, குப்பியன்தறை, பாலப்பள்ளம், திங்கள்நகா், இரணியல், கண்டன்விளை, நெய்யூரி, பட்டரிவிளை, தலக்குளம், சேரமங்கலம், அழகன்பாறை, கருமண்கூடல், மண்டைக்காடு, லட்சுமிபுரம், நடுவூா்கரை, பரப்பற்று, கூட்டுமங்கலம், புதூா், மணவாளக்குறிச்சி, பிள்ளையாா்கோவில், கடியப்பட்டினம், அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, வெள்ளிச்சந்தை, முட்டம், சக்கப்பத்து, ஆற்றின்கரை, சாத்தன்விளை, ஆலன்விளை, திருநயினாா்குறிச்சி, குருந்தன்கோடு, கட்டிமாங்கோடு ஆகிய இடங்களிலும் அவற்றை சாா்ந்த துணை கிராமங்களிலும் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.